இந்திய மாலுமி விவேக்கை கண்டறிய ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் இந்திய மாலுமிகள் சங்கம் கோரிக்கை
15 Jul 2026, 1:40 am
<p><strong>இந்திய மாலுமி விவேக்கை கண்டறிய ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் இந்திய மாலுமிகள் சங்கம் கோரிக்கை</strong></p><p>சென்னை, ஜூலை 14- இந்திய மாலுமி விவேக்கின் இருப்பிடத்தை கண்டறிய ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக தலை யிட வேண்டும் என்று இந்திய மாலுமி கள் சங்கம் (ஃபார்வர்டு சீமென்ஸ் யூனியன் ஆப் இந்தியா) கோரிக்கை விடுத்துள்ளது. </p><p>இது தொடர்பாக சங்கத்தின் துணை த்தலைவர் டி.நரேந்திரராவ் செவ்வா யன்று (ஜூலை 14) செய்தியாளர்களிடம் கூறியதாவது: விழுப்புரத்தை சேர்ந்த மாலுமி ஜெ.விவேக் ஹெர்ம்ஸ் ஷிப் மேனேஜ் மென்ட் பிரைவேட் லிமிடெட் மூலம் வணிகக் கப்பலான எம்.வி.பெர்சிஸ் டென்சியில் பணிக்கு சேர்ந்தார். </p><p>மார்ச் 27ந் தேதி வரை தனது குடும்பத்தின ருடன் தொடர்ந்து தொடர்பில் இருந் துள்ளார். </p><p>அதன்பிறகு செல்போன் செயல்படவில்லை. மே 6 அன்று பணியை முடித்து கப்பலில் இருந்து விவேக் இறங்கி விட்ட தாக அவரது குடும்பத்தினரிடம் நிறுவனம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளது. </p><p>மே 7 அன்று தோஹா-மஸ்கட், மே 8 அன்று மஸ்கட்- மும்பை நோக்கி விமானத்தில் செல்லும் பயண திட்டத்தின்படி இ-டிக்கெட்டை நிறுவனம் வழங்கியதாக கூறப்படு கிறது.</p><p> இந்த பயணத் திட்டப்படி விவேக் விமானங்களில் பயணித்தாரா, இந்தியா வந்து சேர்ந்தாரா என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை கப்பல் நிறுவனம் வழங்க மறுக்கிறது. இரண்டு மாதங்களாகியும் மாலுமி அவர் வீடு திரும்பவில்லை; தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. </p><p>இதனால் குடும்பத்தினரிடையே கடும் அச்சமும் கவலையும் நிலவுகிறது</p><p>. இது தொடர்பாக உள்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், கப்பல்துறை அதிகாரிகள், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளோம். விழுப்புரம் மாவட்ட த்தில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. </p><p>இருப்பினும் முன்னேற் றம் இல்லாமல் உள்ளது. இந்த விவ காரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு மாலுமியை கண்டுபிடிக்க வேண்டும். </p><p>குறிப்பாக, விவேக் பயணம் மேற் கொண்டதற்கான போர்டிங் பாஸ், விமானப் பதிவு, பயணிகள் பட்டியல், குடிநுழைவு பதிவுகள் உள்ளிட்ட ஆவ ணங்களை ஹெர்ம்ஸ் ஷிப் மேனேஜ் மென்ட் நிறுவனம் வழங்க அரசு உத்தர விட வேண்டும்.</p><p> விவேக்கின் பயணத்தை முழுமையாக சரிபார்க்க வேண்டும். கத்தார், ஓமன் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க வேண்டும். அனைத்து அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் விரிவான விசா ரணை நடத்த வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது விவேக்கின் மனைவி வி.சினேகா, போர்ட் அண்ட் டாக் எம்பிளாயீஸ் யூனியன் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.</p>
