இழப்பீட்டுத் தொகை வழங்கிய அமைச்சர்
21 Nov 2025, 2:51 pm
<p><strong>இழப்பீட்டுத் தொகை வழங்கிய அமைச்சர் </strong></p>
<p> சிவகங்கை,நவ.21- சிவகங்கை மாவட்டம். திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட எஸ்.செவல்பட்டி கிராமம் மற்றும் சிங்கம்புணரி வட்டத்தி ற்குட்பட்ட மல்லாக்கோட்டை ஆகிய பகுதிகளில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் விபத்தின் காரணமாக உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1,25,000 மதிப்பீட்டில் இழப்பீட்டு தொகைக்கான காசோலை யினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார். திருப்பத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையப் பகுதியில் நவம்பர் 21 அன்று நடை பெற்ற அரசு நிகழ்ச்சியில் , திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, துணை தலைவர் கான்முகமது, தமிழ்நாடு மின் பகிர்மான கழக செயற்பொறியளார் (பொ)ஜான் எஃப் கென்னடி மற்றும் திருப்பத்தூர் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
