தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விடுமுறை தினத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய அமைச்சர் கீர்த்தனா காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட குறைகளை சரி செய்திடுக: அரசு ஊழியர் சங்கம்

23 May 2026, 10:23 pm
விடுமுறை தினத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய அமைச்சர் கீர்த்தனா காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட குறைகளை சரி செய்திடுக: அரசு ஊழியர் சங்கம்
<p><strong>விடுமுறை தினத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய அமைச்சர் கீர்த்தனா காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட குறைகளை சரி செய்திடுக: அரசு ஊழியர் சங்கம்</strong></p><p>விருதுநகர், மே 23- தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் பதவி ஏற்றுக் கொண்டார். </p><p>அவரைத் தொடர்ந்து 9 பேர் அமைச்சர்களாக வும் பதவி ஏற்றனர். </p><p>இதில் தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா பதவி ஏற்றார். </p><p>இந்நிலையில் விடு முறை தினமான சனிக்கிழமை விருதுநகர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டத் திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.</p><p> இதனால் வேறு வழியின்றி அரசு அலுவலர்கள் ஆட்சி யரகத்திற்கு வந்தனர். </p><p>ஏற்கனவே, அறி விக்கப்பட்ட நேரத்தை தாண்டி 2 மணி நேரம் காலதாமதமாக அமைச்சர் கீர்த்தனா வந்தார். </p><p> இதனால் அரசு அலுவலர்கள் அதிருப்திய டைந்தனர்.</p><p> கூட்டம் முடிந்த பின்பு, அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களை சந்தித்தார். </p><p>அப்போது, முதல் முறையாக தொழிற்துறை குறித்த அறிமுகக் கூட்டம் தான் நடை பெற்றது என்றார். </p><p>பின்பு, நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு, கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். </p><p>அப்போது தான் டைடல் பார்க், பல் மருத்துவ கல்லூரி, பி.எம் மித்ரா திட்டம் ஆகியவை குறித்து சரி யாக பதில் கூறுவேன். </p><p>ஏனோ தானோ எனப் பதில் கூறக் கூடாது எனத் தெரிவித்தார்.</p><p> கோவையில் உள்ள சூலூரில்10 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய் யப்பட்டுள்ளாரே என்ற கேள்விக்கு, தலை வர் என்ன முடிவு எடுத்தாலும் சரியாக இருக்கும் என பதில் கூறினார். </p><p>அரசு ஊழியர்கள் கோரிக்கை இந்நிலையில், விடுமுறை தினத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். </p><p>அதில் கூறியிருப்பதாவது: புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அரசு மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்வது என்பது வரவேற்கத்தக்கது. </p><p>ஆனால், அரசு அலுவலகங்களில் மாநிலம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ளன. </p><p>ஏராளமாய் மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வரும் சூழ்நிலையில் அதற்கேற்ப புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படவில்லை. </p><p>ஏற்கனவே இருக்கின்ற பணியிடங்களில் 5 லட்சத்திற்கும் மேல் காலியாக உள்ளது</p><p>. அதை நிரப்பாமல் தனியார் முகமை மூலமும் ஒப்பந்த வழியிலும் நியமனங்கள் நடைபெற்று வருகிறது. </p><p>உதாரணமாக, சத்துணவு திட்டத்தில் 60 சதவிகிதம் காலிப் பணியிடங்கள் உள் ளன</p><p>. இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்க ளுக்கான சத்துணவுத் திட்டத்தில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது. </p><p>பணியாளர்கள் இல்லை மேலும், மருத்துவமனைகளில் மருத்து வர் முதல் செவிலியர் உள்ளிட்ட பணியா ளர்கள் வரை ஏராளமான பணியிடங்கள் காலி யாக உள்ளன.</p><p> ஆனால், ஒப்பந்தமுறை, அவுட் சோர்சிங் முறையில் நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. </p><p>இதனால், மருத்து வமனை கட்டடங்கள் பிரம்மாண்டமாய் இருந்த போதிலும் உள்ளே பணிபுரிய ஆட் கள் இல்லாத நிலையே மாநிலம் முழுவதும் உள்ளது. </p><p>வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட முக்கியமான துறைகளிலேயே தனியார்மயம் விரிவடைந்து வருகிறது. </p><p>இதனால் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மிகவும் பின்னடைவு ஏற்படுகிறது. </p><p>குற்றவாளிகளாக சித்திரிக்க வேண்டாம் இதுபோன்ற ஏராளமான குறைகளை வைத்துக் கொண்டு புதிதாக பெறுப்பேற்ற ஆட்சியும் ஆட்சியாளர்களும் அரசு ஊழி யர்களை மக்கள் மத்தியில் குற்றவாளி களைப் போல் சித்தரிப்பது, பொதுமக்களி டம் அரசு ஊழியர்கள் மீதான பார்வையை மோசமாக்கும். </p><p>மேலும், வீடியோ மூலமாகவும் செய்தியா ளர்களை வைத்துக் கொண்டும் விளம்ப ரத்திற்காக நடத்தும் ஆய்வினால் அரசு ஊழி யர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவ தால் எவ்வித தீர்வும் ஏற்படாது. </p><p>எனவே அரசு அலுவலக தினங்களில் அமர்ந்து ஆய்வுகளை நடத்தி, திட்டங்கள் அனைத்தும் சரியாக மக்களை சென்ற டைய செய்திட வேண்டும். </p><p>அதற்கு அரசு ஊழி யர்கள் 100 சதவிகிதம் தயார் நிலையில் உள் ளோம் என அதில் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.