சான்றிதழை எடுத்து வராத அமைச்சர் கீர்த்தனா!
11 May 2026, 10:39 pm
<p><strong>சான்றிதழை எடுத்து வராத அமைச்சர் கீர்த்தனா!</strong></p><p>தவெக அமைச்சரவையில், 30 வயதே யான இளம் அமைச்சரான கீர்த்தனா சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றவர். </p><p> இவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்க வருமாறு, அமைச்சர்கள் வரிசையில் கடைசியாக அழைக்கப்பட்டார். </p><p>பதவி யேற்பு மேடைக்குச் சென்ற அவரிடம், சட்ட மன்றச் செயலாளர் சீனிவாசன், தேர்தல் ஆணையம் அளித்த வெற்றிச் சான்றி தழை கேட்டார்.</p><p> ஆனால், அமைச்சர் கீர்த்தனா சான்றிதழ் எடுத்துவரவில்லை. தங்கியிருந்த ஹோட்டலிலேயே வைத்து விட்டு வந்திருந்தார்.</p><p> இதனால், சில மணி நேரத்திற்கு பிறகு, சான்றிதழை எடுத்து வந்து கொடுத்து, பதவிப் பிர மாணம் எடுத்துக்கொண்டார்.</p><p> சில நாட் களுக்கு முன்பு, ஊடகங்களிடம் தமிழில் பேசாமல் இந்தியில் பேசி கீர்த்தனா சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. </p><p>சான்றிதழை எடுத்து வராத எம்எல்ஏ-க்கள் அமைச்சர் கீர்த்தனா மட்டுமல்லா மல், தவெகவைச் சேர்ந்த சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ சிவக்குமார், சோழிங்கர் தொகுதி எம்எல்ஏ ஈ.சி.ஆர். சரவணன், பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ காமாட்சி ஆகியோரும் சான்றிதழை எடுத்து வராததால், பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. </p><p>அதிமுகவின் ஏற்காடு தொகுதி எம்எல்ஏ உஷாராணி, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் ஆகி யோரும் சான்றிதழை எடுத்துவராததால், அவர்கள் பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது. </p><p>தேர்தலில் வெற்றி பெற்ற 15 நாட்களுக் குள் பதவியேற்றுக்கொள்ள வேண்டும். </p><p>பதவியேற்க வரும்போது, சான்றிதழை எடுத்துவர வேண்டும் என்று முதல் நாளே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. </p><p>எனினும், பலர் எடுத்து வராதது பதவியேற்பின் போது சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல, வேளச்சேரி தொகுதி தவெக எம்எல்ஏ குமார் என்பவர் பக்கத்தில் இருந்த மற்றொரு எம்எல்ஏ-வின் வெற்றிச் சான்றிதழை, மாற்றி எடுத்துச் சென்றார். </p><p>இதனை முதன்மைச் செயலா ளர் கண்டுபிடித்து கூறியதும், பின்னர், தனது சான்றிதழை தேடிக் கொடுத்து, உறுதிமொழி எடுத்துக்கொண்டார். </p><p>இந்த சம்பவம் பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.</p>
