பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
8 Jan 2026, 2:44 pm
<p><strong>பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், ஜன.8 - பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.45, எருமைப்பால் ரூ.60 ஆக விலை உயர்த்தி வழங்கக் கோரி வியாழனன்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் செங்கப்பள்ளி, நத்தக்காடை யூர் ஆகிய இரு பகுதிகளில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருப் பூர் மாவட்டத்திலும் நடைபெற்றது. ஊத் துக்குளி ஒன்றியம் செங்கப்பள்ளியில் பால் உற்பத்தியாளர் சங்க திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது, ஊக்கத் தொகை நிலுவை பாக்கி வழங்க வேண்டும். கலப்பு தீவனம் 50% மானிய விலையில் வழங்க வேண்டும். ஆரம்ப சங்க பணியாளர்களுக்கு பணி பாது காப்பு, ஊதிய உயர்வு வழங்க வேண் டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத் தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் கை.கொளந்தசாமி, தமிழ்நாடு விவ சாய சங்க முன்னாள் தலைவர் பழ னிச்சாமி உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் ஈஸ்வரி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ் ணன், சுப்பிரமணி, முருகசாமி, முத்து சாமி உட்பட திரளான பால் உற்பத்தியா ளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் நத்தக்காடையூரில் சங் கத்தின் மாவட்டத் தலைவர் பொன். வேலுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், மாநில துணைத் தலைவர் ஏ.எம்.முனுசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.எஸ். செல்வராஜ் உட்பட பால் உற்பத்தியா ளர்கள் பலர் பங்கேற்றனர்.செல்ல முத்து நன்றி கூறினார்.</p>
