மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் என்ற பழைய பெயரில் பணிகளை நடை முறைப்படுத்த வேண்டும்
2 Jul 2026, 1:51 am
<p>மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் என்ற பழைய பெயரில் பணிகளை நடை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்டம், பல்லக்காபாளையத்தில் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியச் செயலாளர் ஆர்.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, மாநிலக்குழு உறுப்பினர் எம்.கணேசன், ஒன்றியப் பொருளாளர் சி.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
