மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தை தொடர்ந்து
21 May 2026, 12:29 am
<p>மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தக்கோரி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேடக்கட்டமடுவு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, ஒன்றியச் செயலாளர் கே.குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
