மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12-இல் தண்ணீர் திறக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
14 May 2026, 9:56 pm
<p><strong>மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12-இல் தண்ணீர் திறக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்</strong></p><p>தஞ்சாவூர், மே 14- டெல்டா மாவட்ட பாசனத்துக்காக, மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். </p><p> தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.</p><p> கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். </p><p>கூட்டத்தில் வருவாய்த்துறை, கூட்டுறவு, வேளாண்மை, நீர்வளத்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். </p><p>கூட்டத்தில் பங்கேற்ற முன்னோடி விவசாயிகள் பேசியது: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்க ஏதுவாக மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>தமிழக முதல்வர் மேட்டூர் அணையையும், கல்லணையையும் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும். </p><p> குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் ஆகியவற்றை போதியளவு இருப்பு வைக்க வேண்டும்.</p><p> அதே போல் குறுவை தொகுப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு பயிர் கடன் வழங்க வேண்டும்.</p><p> தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிப்படி விவசாயிகளின் பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். </p><p>நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500ம் விலையை வரும் கொள்முதல் பருவத்திலிருந்து வழங்க வேண்டும்’’ இவ்வாறு பேசினர்.</p>
