அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மனநலம் மற்றும் போதை விழிப்புணர்வு
20 Feb 2026, 2:39 pm
<p><strong>அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மனநலம் மற்றும் போதை விழிப்புணர்வு</strong></p>
<p>சிதம்பரம், பிப். 20- அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் இணைந்து “நேர்மறையான மனநலம் மற்றும் போதைப் பழக்கத் தடுப்பு” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பல்கலைக்கழக இணைப் பதிவாளர் வி.பி. ஜெகதீஸ்வரன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் குரு. அற்புதவேல் ராஜா வரவேற்புரை வழங்கினார். சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.</p>
