முந்தய பக்கம்

செவிலியர் போராட்டத்துக்கு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் ஆதரவு

24 Dec 2025, 6:25 pm
செவிலியர் போராட்டத்துக்கு  மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் ஆதரவு
<p><strong>செவிலியர் போராட்டத்துக்கு &nbsp;மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் ஆதரவு</strong></p> <p>தஞ்சாவூர், டிச.24-&nbsp;<br /> தற்காலிக அடிப்படையில் பணி புரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முன்பு, எம்.ஆர்.பி செவிலியர்கள் 7 ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.&nbsp;<br /> அவர்களை, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மாநில பொருளாளர் பி.சாய்சித்ரா மற்றும் நிர்வாகிகள் நந்தினி, சித்ரா, மாரியம்மாள், பரமேஸ்வரி, சூர்யா ஆகியோர் நேரில் சந்தித்து, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு, நிதி உதவியும் வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram