தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் விற்பனை செய்ய அனுமதி: அறிவிப்பாணை வழங்கிய மேயர்

6 Jan 2026, 4:23 pm
தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் விற்பனை செய்ய அனுமதி: அறிவிப்பாணை வழங்கிய மேயர்
<p><strong>தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் விற்பனை செய்ய அனுமதி: அறிவிப்பாணை வழங்கிய மேயர்</strong></p> <p>மதுரை, ஜன.6 - மதுரை மாநகராட்சியின் வாழ்வா தார&ndash;பொது சுகாதார இயக்கம் மற்றும் &nbsp;தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தெருவோர விற்ப னையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் முக்கிய அறி விப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் சித்ரா &nbsp;விஜயன் உத்தரவின் பேரில், கீழ சித்திரை வீதி (ஹாஜி மூசா முதல் மதுரை ஆதீனம் வரை) மற்றும் தெற்கு சித்திரை வீதி பகுதிகளில் சிறு &nbsp;வியாபாரம் செய்து வரும் 103 தெரு வோர விற்பனையாளர்கள் தொடர்ந்து &nbsp;விற்பனை செய்ய அனுமதி வழங்க &nbsp;வேண்டும் என மதுரை தெற்கு மாநகர் காவல் துறைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணை, சாலை யோர வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம்&ndash;2014-இன் &nbsp;அடிப்படையில் வழங்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. தனி யான விற்பனை மண்டலம் அமைக்கப் படும் வரை, அடையாள அட்டை பெற் றுள்ள தெருவோர விற்பனையா ளர்களை அப்புறப்படுத்தவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் விற்பனை செய்ய &nbsp;அனுமதிக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணையை செவ்வாயன்று மதுரை மாநகராட்சி மேயர் (பொ) தி.நாகராஜன் நேரடி யாக தெருவோர வியாபாரிகளிடம் வழங்கினார். இந்நிகழ்வின் போது சிஐடியு சாலையோர மற்றும் மார்க்கெட் &nbsp;வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உட னிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.