தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்கள் மீதான அடக்குமுறையை கண்டு மவுனமாக இருக்க முடியாது போராட்டக் களத்தில் இணைந்த மலையாள நடிகர் மேத்யூ தாமஸ்

24 Jul 2026, 9:04 pm
மாணவர்கள் மீதான அடக்குமுறையை கண்டு மவுனமாக இருக்க முடியாது போராட்டக் களத்தில் இணைந்த மலையாள நடிகர் மேத்யூ தாமஸ்
<p><strong>மாணவர்கள் மீதான அடக்குமுறையை கண்டு மவுனமாக இருக்க முடியாது போராட்டக் களத்தில் இணைந்த மலையாள நடிகர் மேத்யூ தாமஸ்</strong></p><p>கொச்சி நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி தில்லியை தொடர்ந்து, நாடு முழுவதும் மாண வர்கள் - இளைஞர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டம் அனைத்து தரப்பிலும் ஆதரவு பெறுகிறது. </p><p>இந்நிலையில், மாணவர் போரா ட்டத்திற்கு மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆதரவு தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக கொச்சியில் நடைபெற்ற போராட்ட த்தில் அவர் மாணவர்களோடு பங் கேற்றார்.</p><p>அப்போது அவர் பேசு கையில், “எனக்கு அரசியலில் ஈடு பாடு இல்லை என்று கூறிவந்தவன் நான். ஆனால், கடந்த சில நாட் களாக நாட்டில் நடக்கும் நிகழ்வு கள் என்னை மிகவும் வேதனைப் படுத்துகின்றன. </p><p>மாணவர்கள் மீதான அடக்குமுறையை கண்டு காணாமல் மவுனமாக இருக்க முடி யாது. கடந்த மூன்று நாட்களாக சமூக வலைத்தளம் முழுவதும் தில்லி போராட்டக் காட்சிகளால் நிரம்பியுள்ளது. </p><p>எல்லோராலும் நேரில் சென்று போராட்டத்தில் கல ந்து கொள்ள முடியாது. ஆனால், நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். ஒரு இன்ஸ்டாகிராம் பதிவைப் பகிர்வது கூட தில்லியில் போராடும் மாணவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். </p><p>தில்லியில் என்ன நடக்கிறது என்று தெரியாதவர்களும் இருக்கலாம். அவர்களுக்கு அமைதியான முறை யில் நிலைமையை விளக்கிப் புரிய வைக்க வேண்டும். நாம் இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.</p><p>மேலும் பலரை இந்தப் போராட்டத்தின் சகோதரர் களாக மாற்ற வேண்டும். யாரு க்கும் எந்தவிதத்திலும் தொந்தரவு தராத வகையில், நமது சொந்த முறையில் எதிர்ப்பை வெளிப் படுத்துவோம்” என நடிகர் மேத்யூ தாமஸ் கூறினார். </p><p><strong>தேசிய கொடியுடன் கவுரி</strong></p><p>மலையாள நடிகை கவுரியும் இந்திய மாணவர் சங்க போரா ட்டத்தில் இணைந்து, மாண வர்கள் - இளைஞர்களுக்கு வலு வான ஒற்றுமையை வெளிப்படு த்தினார். குறிப்பாக இந்த போராட்டத்தின் போது, கவுரி தேசியக் கொடியுடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.