அரசுப் பள்ளியில் கணித புதிர் போட்டி
15 Mar 2026, 4:11 pm
<p><strong>அரசுப் பள்ளியில் கணித புதிர் போட்டி</strong></p>
<p>புதுக்கோட்டை, மார்ச்14- உலக கணித தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த அக்கச்சிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், கணித புதிர்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை, கணித புதிர்கள் குறித்து போட்டி நடத்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவர் ரகமதுல்லா உலக கணித தினம் குறித்து பேசினார். கணித புதிர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. ஆசிரியை சிந்தியா நன்றி கூறினார்.</p>
<p> </p>
<p> </p>
