தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேயிலைக் காடுகளின் ரத்தம் தோய்ந்த நூற்றாண்டு வரலாறு

24 May 2026, 10:50 pm
தேயிலைக் காடுகளின்  ரத்தம் தோய்ந்த நூற்றாண்டு வரலாறு
<p><strong>தேயிலைக் காடுகளின் ரத்தம் தோய்ந்த நூற்றாண்டு வரலாறு</strong></p><p>“நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்...” என்ற ஆதவன் தீட்சண்யா வின் வரிகளை அடியொற்றி, மாஞ்சோ லை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் களின் ஐந்து தலைமுறை கால ரத்தச் சாட்சியமாக வெளிவந்திருக்கிறது இந்நூல்.</p><p> மாஞ்சோலையிலிருந்து மதுரை சட்டக் கல்லூரிக்கு வந்து வழக்கறிஞராக உயர்ந்த இ. இராபர்ட் சந்திரகுமார், தன் மண்ணின் வலிகளை இதில் ஆவணமாகப் பதிவு செய்துள்ளார். </p><p>அடிமைத்தனத்தின் மாயவலை 1929-இல் சிங்கம்பட்டி ஜமீனிடம் 95 ஆண்டுகாலக் குத்தகைக்கு நிலம் பெற்று, மும்பையின் பி.பி.டி.சி (BBTC) நிறுவனம் மாஞ்சோலையில் தேயிலை தோட்டங்களை உருவாக்கியது. </p><p>நெல்லையின் கடுமையான வறட்சி, பசி மற்றும் சாதியக் கொடுமைகளிலிருந்து தப்பிக்க நினைத்த எளிய மக்களுக்கு ‘முன்பணம்’ தந்து, ஆசை வார்த்தை கூறித் தரகர்கள் மூலம் இந்த அடர்ந்த காடுகளுக்குள் இழுத்து வந்தனர்.</p><p> அட்டைகள், பாம்புகள், காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், கடும் குளிரிலும் உழைத்த மக்களின் கதையை லூர்து அம்மாள் குடும்பத்தின் வழியே வாசிக்கும்போது கண்கள் நனைகின்றன.</p><p> இங்கிருந்து தப்பிக்க முயன்றவர்களின் கணுக்கால் நரம்பை அறுப்பது, சிறை வைப்பது என ஆப்பிரிக்க அடிமை முறைக்கு இணை யான கொடூரங்களை இக்கம்பெனி அரங்கேற்றியது. </p><p>நிறைவடையும் குத்தகையும் துயரமும் அத்தனை அடக்குமுறைகளையும் கடந்து, ஏ.ஐ.டி.யு.சி (AITUC) உள்ளிட்ட தொழிற்சங்கப் போராட்டங்களின் மூலமே தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளையும், கல்வி மற்றும் போக்குவரத்து வசதிகளையும் வென் றெடுத்தனர். </p><p>இத்தனை நெருக்கடி யிலும் அவர்கள் பகிர்ந்துண்ட வாழ்வும், எஸ்டேட்டில் சினிமா திரையிடும்போது காட்டிய பரவசமும் அழகாகப் பதிவாகி யுள்ளன. </p><p>தற்போது குத்தகை முடிந்து, இப்பகுதி காப்புக் காடாக அறிவிக்கப் பட்டு எஸ்டேட் மூடப்படும் தருவாயில் உள்ளது. </p><p>நூறாண்டு காலம் கொள்ளை லாபம் சம்பாதித்த கம்பெனி எளிதாக வெளியேறிவிடும்.</p><p> ஆனால், ஐந்து தலை முறையாகத் தாங்கள் வாழ்ந்த நிலம், பிள்ளைகள் படித்த பள்ளி, உழைத்துத் தேய்ந்த மண் என அனைத்தையும் பிரிந்து நிற்கும் 2000-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வு இந்த நூற்றாண்டின் ஆகப் பெரும் துயரமாக, விடை தெரியாக் கேள்விக்குறியாக நிற்கிறது. </p><p>உழைப்பை நேசிக்கும் ஒவ்வொரு வரும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல் முகத்தைத் தெரிந்துகொள்ள அவசியம் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான வரலாற்றுப் பதிவு இது. </p><p>மாஞ்சோலை 1349/2 எனும் நான் ஆசிரியர்: வழக்கறிஞர் இ. இராபர்ட் சந்திரகுமார் வெளியீடு: விகடன் பிரசுரம் பக்கங்கள்: 368 | விலை: ₹475</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.