“மம்தா பானர்ஜி முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொள்பவர் அல்ல”
9 May 2026, 9:33 pm
<p><strong>“மம்தா பானர்ஜி முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொள்பவர் அல்ல” </strong></p><p>திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொள்பவர் அல்ல என எழுத்தாளர் ரக்சந்தா ஜலில் கூறியுள்ளார். </p><p>இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறு கையில்,“தேர்தல் முடிந்தவுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை “முஸ்லிம் திருப்திப்படுத்துபவர்” என்று பாஜகவினர் கூறுகின்றனர். </p><p>இது அவர்க ளின் சொந்த விமர்சனம். </p><p>ஆனால் இது மிகவும் தவறானது. </p><p>மம்தா பானர்ஜி முன்பு பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தார். இந்த கூட்டணியை முதலில் நினைவில் கொள்ள வேண்டும். </p><p>இது சாதாரணமாக மறக்கக்கூடியது அல்ல. </p><p>2002ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான குஜராத் கலவரத்தின் போது மம்தா பானர்ஜி கடைப்பிடித்த மவுனம் மிக மோசமானது ஆகும். </p><p>அதனால் மம்தா பானர்ஜி முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொள்பவர் அல்ல என்பதே உண்மை” என அவர் கூறினார்.</p>
