ஆண் யானையின் சடலம் கண்டெடுப்பு
23 Nov 2025, 6:20 pm
<p><strong>ஆண் யானையின் சடலம் கண்டெடுப்பு</strong></p>
<p>கோவை, நவ.23- தடாகம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரி ழந்த நிலையில் கண்டறியப்பட்ட சம்ப வம் குறித்து வனத்துறையினர் விசா ரித்து வருகின்றனர். கோவை மாவட்டம், தடாகம் வனச் சரகத்திற்குட்பட்ட நாத்துக்காடு காப்புக் காட்டிலிருந்து 25 மீட்டர் தொலைவில் உயிரிழந்த நிலையில் ஆண் யானை சடலம் கிடப்பதாக வனத்துறையின ருக்கு சனியன்று தகவல் கிடைத்தது. மாலை நேரமாக இருந்ததால் பிரேத பரிசோதனைக்கு போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால், ஞாயிறன்று வன அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தன் னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உறுதியாகத் தெரியவரும் என வனத்துறையினர் கூறினர். கடந்த சில மாதங்களாக கோவை வனப்பகுதியில் யானைகள் இயற்கைக்கு மாறாக இறக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடை பெற்று வருவது சோகத்தை ஏற்படுத் தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வனத் துறை உயரதிகாரிகள் தீவிரமாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.</p>
