மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார்
7 Jun 2026, 9:37 pm
<p><strong>மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார்</strong></p><p>மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான சலீம் குமார் (56) கல்லீ ரல் நோய்க்கான சிகிச்சை மற் றும் ஓய்வின் காரணமாக அவர் நீண்ட காலமாக திரை யுலகில் இருந்து விலகி இருந் தார். </p><p>அவரது உடல்நிலை மோசம டைந்ததை அடுத்து, ஜூன் 6ஆம் தேதி முதல் எடப்பள்ளியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அவர் வென்டி லேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு சலீம் குமார் கால மானார். மிமிக்ரி மேடையில் ஜொலித்து, நகைச்சுவைப் பாத்திரங்களில் திரையுல கில் நுழைந்த சலீம் குமார், தனது நடிப்புத் திறமையால் பல மறக்க முடியாத கதா பாத்திரங்களையும் உருவாக்கியுள்ளார். </p><p>தனது முப்பது ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில், அவர் சுமார் 280 படங்க ளில் நடித்துள்ளார். மூன்று படங்களை யும் இயக்கியுள்ளார். பல பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கியுள்ளார். குறிப்பாக சொந்தமாக மிமிக்ரி, நாட கக் குழுக்களையும் நடத்தி வந்தார். 2010ஆம் ஆண்டு வெளியான ஆதா மிண்டே மகன் அபு திரைப்படத்தில் முக் கிய வேடத்தில் நடித்ததற்காக சிறந்த நடி கருக்கான தேசிய மற்றும் மாநில திரைப்பட விருதுகளை வென்றார்.</p><p>அச்சன் உறங்காத்த வீடு (சிறந்த துணை நடிகர்), அயலும் நானும் தமிழர் (நகைச் சுவை நடிகர்) மற்றும் கருட ஜுதன் (சிறந்த கதை) ஆகிய படங்களுக்காக மாநில விருதுகளையும் வென்றார். திரைப்படம், கலாச்சாரம் மற்றும் அர சியல் துறைகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் மறைந்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் வி.டி.சதீசன் மற்றும் திரைக்கலைஞர்கள் அமைப்பான ‘அம்மா’வின் சார்பில் நடி கர்கள் ஜெயராம், குக்கு பரமேஸ்வரன் ஆகியோர் பரவூர் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். மத ரீதியா சடங்கு கள் இல்லாமலும் முழு அரசு மரியாதை யுடனும் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. </p><p>முடிவில்லாத சிரிப்பொலிக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரது மறைவு, திரையுலகையும் மலையாளிகளையும் ஆழ்ந்த துயரக் கடலில் ஆழ்த்தியுள்ளது. சக கலைஞர்களும் சினிமா ரசிகர்களும் அவரைப் பற்றிய தங்களது நினைவு களை சமூக ஊடகங்களிலும் செய்தி ஊட கங்களிலும் வேதனையுடன் பகிர்ந்து வரு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
