தமிழ்நாட்டின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்
29 May 2026, 9:47 pm
<p><strong>தமிழ்நாட்டின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்</strong></p><p>சென்னை, மே 29 - தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளி யாகியுள்ளது</p><p>. கடந்த மே 26 அன்று, தில்லியில் நடந்த யுபிஎஸ்சி கூட்டத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகிய மூன்று சீனியர் டிஜிபி-க்களில் ஒருவரை நிய மிக்க ஒப்புதல் அளிக்கப் பட்டிருந்தது. </p><p>சீனியாரிட்டி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த வன்னியப் பெருமா ளுக்கு தமிழக அரசு நன்ன டத்தை சான்றிதழ் வழங்காத தால் அவரின் பெயர் நீக்கப் பட்டு மகேஷ்குமார் அகர்வா லின் பெயர் சேர்க்கப்பட்டது. </p><p>மகேஷ் குமார் அகர்வால் அதிமுக ஆட்சியில் சென்னை காவல் துறை ஆணையராகப் பணி யாற்றியவர். தற்போது ஒன்றிய அரசின் மாற்றுப்பணி அடிப் படையில் தில்லியில் பணி யாற்றி வந்தார். </p><p>தற்போது டிஜிபி-யாக நியமிக்கப் பட்டதை அடுத்து, அவர் விரைவில் சென்னை திரும்ப உள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்தவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் அகர்வால், 1994-ஆம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். </p><p> இவரது தந்தை ஒரு வழக்க றிஞர்.</p><p>அவரைத் தொடர்ந்து சட்டம் பயின்ற இவர், பின்னர் காவல்துறையில் இணைந்தார். தனது 22-ஆவது வயதிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, ஐபிஎஸ் அதிகாரி யாகத் தனது பணியைத் தொடங்கினார். </p><p>காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்பு களில் பணியாற்றிய இவர், 2020 முதல் 2021 வரை சென்னை பெருநகர காவல் ஆணையராகப் பணியாற்றி னார்.மேலும், ஆயுதப்படை ஏடிஜிபி, பிஎஸ்எஃப் ஏடிஜிபி உள்ளிட்ட முக்கியப் பொறு ப்புகளையும் வகித்துள்ளார்.</p><p>இவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்தப் பொறுப் பில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
