மகாராஷ்டிரா: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு!
2 hours before
<p>மகாராஷ்டிர மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு அறிக்கையைத் தயாரிக்க, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அறிவித்துள்ளார்.</p><p>இக்குழுவில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆர்.சி. சவான் மற்றும் எஸ்.ஜி. மெஹரே, மகாராஷ்டிராவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டி.கே. ஜெயின், முன்னாள் அரசுத் தலைமை வழக்கறிஞர் வீரேந்திர சரஃப், அரசியலமைப்புச் சட்ட நிபுணர் ரமேஷ் படாங்கே மற்றும் கல்வியாளர் சுவர்ணா ராவல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p><p>நாக்பூரில் நடைபெறவுள்ள மாநிலச் சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதற்கான சட்ட மசோதாவைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் ஃபட்நாவிஸ் தெரிவித்துள்ளார். </p><p><br></p>
