மகாராஷ்டிராவில் மகளிர் உதவித் தொகை திட்டத்தில் இருந்து 92 லட்சம் பேர் நீக்கம்!
14 Jul 2026, 11:14 am
<p>மகாராஷ்டிராவில் மகளிர் உதவித் தொகை திட்டத்திலிருந்து சுமார் 92 லட்சம் பயணாளர்கள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.</p><p>மகாராஷ்டிரா அரசு ‘மாஜி லட்கி பஹின் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்குகிறது.</p><p>இதன்மூலம் 2.4 கோடி பேர் பயணாளர்களாக இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்திலிருந்து சுமார் 92 லட்சம் பயணாளர்கள் அதாவது 38% பேர் நீக்கப்பட்டுள்ளனர்.</p><p>eKYC பூர்த்தி செய்யாதது, வயது வரம்பு, வருமான உச்ச வரம்பு உள்ளிட்ட பல்வேறு காரங்களின் அடிப்படையில் நீக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் முறைகேடாக பலன் பெற முயன்ற 14,000 ஆண்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. </p><p>திடீரென ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளது நாடுமுழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளதோடு சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது</p><p><br></p>
