மதுரை புறநகரில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு
5 Jul 2026, 10:34 pm
<p><strong>மதுரை புறநகரில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக் குழு சார்பில், 14 தாலுகா, ஒன்றிய மற்றும் இடைக்குழுக்களில் கிராமங்கள் தோறும் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில், மதுரை கிழக்கு மண்டலக் குழுவிற்கு உட்பட்ட சாந்தி நகர், ஆனையூர், ஆலங்குளம், அய்யர்பங்களா, கண்ணனேந்தல், வண்டியூர் மற்றும் விளாங்குடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், கிழக்கு மண்டலக் குழு செயலாளர் எஸ். பாலகிருஷ்ணன், மண்டலக் குழு உறுப்பினர் எஸ். நாகராஜன், சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று சந்தா சேகரித்தனர்.</p>
