ஜே.எம்-5 நீதிமன்ற நீதிபதியை பணியிட மாற்றம் செய்ய கோரிக்கை மதுரையில் 2 ஆயிரம் வழக்கறிஞர்கள் பேரணி!
5 Jun 2026, 9:18 pm
<p><strong>ஜே.எம்-5 நீதிமன்ற நீதிபதியை பணியிட மாற்றம் செய்ய கோரிக்கை மதுரையில் 2 ஆயிரம் வழக்கறிஞர்கள் பேரணி!</strong></p><p>மதுரை, ஜூன் 5 - தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டுக்குழு (ஜாக்) மற்றும் மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 5) மதுரையில், மாவட்ட நீதிமன்ற வளாகம் துவங்கி உத்தங்குடியில் உள்ள உயர் நீதிமன்ற வளாகம் வரை மாபெரும் பேரணி நடைபெற்றது. </p><p>வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு உரிய மரி யாதை அளிக்காமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் ஜே.எம்.-5 (5-ஆவது குற்றவியல் நீதித்துறை நடு வர்) நீதிமன்ற நீதிபதியை பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தி, இந்தப் பேரணி நடைபெற்றது. </p><p>இதில், சேலம், தஞ்சாவூர், கன்னியாகுமரி, விருதுநகர், திருப்பத்தூர், நாமக்கல், விழுப்புரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்கறி ஞர்கள் கலந்து கொண்டனர். </p><p>உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தை அடைந்த வழக்கறிஞர்கள், அங்கு அமைக்கப் பட்டிருந்த தடுப்புகளை தாண்டி வளாகத்திற்குள் பேரணியாக செல்ல முயன்றனர். இதனை காவல் துறையினர் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் உயர் நீதிமன்றக் கிளை வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.</p><p> நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். ஜே.எம்.-5 நீதிமன்ற நீதிபதியை கண்டித்து ஏற்கனவே நீதி மன்றப் பணிகள் புறக்கணிப்பு, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகம் முழுவதிலுமிருந்து வழக்கறிஞர்கள் பங்கேற்ற இந்த பேரணி முக்கி யத்துவம் பெற்றதாக அமைந்தது. </p><p>போராட்டம் தீவிரமடையும் தங்களின் போராட்டம் குறித்து தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டுக்குழுத் தலைவர் வழக்கறிஞர் நந்தகுமார் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “நீதிபதி வழக்கறிஞர் களை அவதூறாக பேசி அவமரியாதை செய்து உள்ளார். </p><p>அதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடைபெற்றது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்,” என்று தெரிவித்தார்.</p>
