தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையின் அடையாளமான மீன் சிலையை மீண்டும் அமைத்திடுக! தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

29 May 2026, 10:16 pm
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையின் அடையாளமான  மீன் சிலையை மீண்டும் அமைத்திடுக! தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
<p><strong>உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையின் அடையாளமான மீன் சிலையை மீண்டும் அமைத்திடுக! தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>மதுரை, மே 29 – மதுரையின் அடையாளமாக விளங்கிய மீன் சிலையை மீண்டும் அமைப்பதற்கான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அளந்து ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது. </p><p>மதுரையில் வெள்ளியன்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் என். </p><p>ஜெகதீசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். </p><p>அப்போது அவர் கூறியதாவது: மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், மதுரையின் அடையாளமான மீன் சிலைகள் மதுரை ரயில் நிலையத்தில் 1998-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டன. மூன்று டன் எடையுடைய பித்தளை உலோகத்தில், மூன்று மீன்கள் நீரூற்றில் துள்ளி விளையாடுவது போன்ற வடிவில் 15 அடி உயரத்தில் இந்த சிலை நிறுவப்பட்டது. </p><p>தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த சிலை கடந்த 22 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.</p><p> பின்னர் 2021-ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளின் போது சிலைகள் அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. </p><p>இதற்கிடையில், தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், மீன் சிலையை மீண்டும் அமைப்பது தொடர்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>அதன்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அடங்கிய குழு, மதுரை கட்டபொம்மன் சிலை அருகே மாநகராட்சி மண்டலம்-3 பகுதியில் உள்ள மாநகராட்சி சுற்றுலா மைய வளாகத்தின் முன்புறத்தில் மீன் சிலையை அமைக்க அனுமதி வழங்கியது. மேலும், இதற்கான பணியாணை கடந்த ஜனவரி 26-ஆம் தேதி வழங்கப்பட்டது. </p><p>அதன்படி ரூ.40 லட்சம் செலவில் நீரூற்றுகளுடன் கூடிய மீன் சிலையை அமைக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தயாராக உள்ளது. </p><p>ஆனால், மாநகராட்சி நிர்வாகம் சிலை அமைக்க வேண்டிய இடத்தை முறையாக அளந்து ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. </p><p>இது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பான செயலாகும். எனவே, உயர்நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக இடத்தை அளந்து ஒதுக்கி, மீன் சிலையை மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.