தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

12 Jun 2026, 2:08 pm
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
<p>தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவது தொடர்பான வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் 8 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளை, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கி, தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்யும் மரபையே பல ஆண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இந்த மரபை மாற்றி, அரசு நிகழ்ச்சிகளில் முதலில் &#39;வந்தே மாதரம்&#39; பாடல் பாடப்பட்டு, பின்னர் தேசிய கீதம், அதற்கு பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படுகிறது.</p><p>கடந்த ஜனவரி 28ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சுற்றிக்கையில் அரசு நிகழ்ச்சிகளை ‘வந்தே மாதரம்’ பாடல் பாடி தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது; மாநில பாடலை பாடி அரசு நிகழ்ச்சியை தொடங்க எந்தத் தடையையும் விதிக்கவில்லை; எனவே தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் 8 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.