தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

83 வயது முதியவரின் ஓய்வூதியக் குறைப்பு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

11 Jun 2026, 12:21 am
83 வயது முதியவரின் ஓய்வூதியக் குறைப்பு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
<p><strong>83 வயது முதியவரின் ஓய்வூதியக் குறைப்பு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!</strong></p><p>சென்னை, ஜூன் 10- பதவி உயர்வு அல்லது பணியிட மாறு தலைக் காரணம் காட்டி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் அடிப்படை ஓய்வூதியத் தொகையைக் குறைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. </p><p>மேலும், பாதிக்கப்பட்ட முதியவரிடம் இருந்து பிடித்தம் செய்யப் பட்ட ரூ. 2,69,900 தொகையையும் 12 வாரங்க ளுக்குள் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட் டுள்ளது. </p><p>நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 83 வயது மூத்த குடிமகன் ஆர். கண்ணப்பனின் அடிப்படை ஓய்வூதியத்தை ரூ.10,650 லிருந்து ரூ.8,724 ஆகக் குறைத்து, கடந்த காலங்களில் கூடுதலாக வழங்கப்பட்டதாகக் கூறி ரூ. 2,69,900 தொகையையும் கருவூலக் கணக்குத்துறை அதிகாரிகள் தவறாகப் பிடித்தம் செய்தனர். </p><p>இதனை எதிர்த்து கண்ணப்பன் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் 2022-ல் வழக்கு தொடரப்பட்டது. </p><p>இந்த வழக்கில் கண்ணப்பன் தரப்பு வழக்கறிஞர்கள் ஆர். ரெங்கராமானுஜம், வி.எஸ். ஜெகதீசன், வி. பொன்னுதுரை மற்றும் ஜி. சுதாங்கன் ஆகியோர் மிகச் சிறந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுத் தனர். </p><p>தமிழ்நாடு அரசுப்பணி விதிகளின்படி இந்த நியமனம் என்பது ‘பணியிட மாறுதல்’ மட்டுமே தவிர பதவி உயர்வு அல்ல என்றும், அரசின் அடிப்படை விதி 22(11) (i)-இன் படி ஓய்வூதியத்தைக் குறைக்க சட்டத்தில் இடமில்லை என்றும் மிக முக்கியமான சட்டப் பிரிவைச் சுட்டிக்காட்டி அவர்கள் திறமை யாக வாதாடினர். </p><p>இந்த அரிய வழக்கை மிகத் துல்லிய மான சட்ட விளக்கங்களோடு வாதாடி, 83 வயது முதியவருக்கு முழுமையான நீதியைப் பெற்றுத் தந்த வழக்கறிஞர்கள் குழுவின் அர்ப்பணிப்பும் சட்டப் புலமையும் போற்றுதலுக்குரியது. </p><p>இவர்களின் அசாத் திய முயற்சியால், அதிகாரிகளின் உத்தரவு சட்டப்படி செல்லாது என்றும் கண்ணப்பன் தனது அசல் ஓய்வூதியத்தைப் பெற தகுதி யுடையவர் என்றும் நீதியரசர் முகமது ஷஃபிக் தீர்ப்பளித்தார். </p><p>வயோதிக காலத்தில் ஒரு மூத்த குடி மகனின் உரிமையை நிலைநாட்ட, சளைக்கா மல் போராடி வெற்றி தேடித்தந்த வழக்கறி ஞர்களின் இந்தச் சாதனை ஒட்டுமொத்த ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் பாராட் டைப் பெற்று வருகிறது. அ</p><p>ரசின் தவறான உத்தரவுகளால் பாதிக்கப்படும் பல்லாயி ரக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் உரிமை யைப் பாதுகாக்கும் அரணாக இந்த தீர்ப்பும், வழக்கறிஞர்களின் வாதமும் அமைந்துள் ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.