தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம் முதலிடம்!

11 May 2026, 10:52 pm
கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம் முதலிடம்!
<p><strong>கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம் முதலிடம்!</strong></p><p>பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே மிக மோசமான மாநிலமாக பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நீடிக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.</p><p><strong>அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள்</strong></p><p>2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின்படி, மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 10 கர்ப்பிணிப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 6 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 5 பேரும், குஜராத் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் தலா 2 பேரும் இத்தகைய கொடூரமான குற்றங்களுக்கு ஆளாகியுள்ளனர்.</p><p><strong>பாதுகாப்பில் அலட்சியம் </strong></p><p>குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள மாநிலங்களில் 4 மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்களாகும். பிரதமர் மோடி மேடைதோறும் பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசினாலும், பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லை என்பதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் தேர்தல் முழக்கங்களாக மட்டுமே உள்ளதே தவிர, நடைமுறையில் பாஜக மாநிலங்களில் அதற்கான அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.