‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கு சிறை பாஜக ஆளும் ம.பி.,யில் புதிய சட்டமாம்!
15 Jul 2026, 9:03 pm
<p><strong>‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கு சிறை பாஜக ஆளும் ம.பி.,யில் புதிய சட்டமாம்!</strong> </p><p>பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருமணம், விவாக ரத்து, சொத்துரிமை உள்ளிட்ட குடும்ப விவகாரங்களை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் பொது சிவில் சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு, தனது இறுதி வரைவு அறிக்கையை அம்மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது. </p><p>இந்த வரைவு அறிக்கையில், “திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் (லிவ்-இன்) ஜோடிகள் தங்களின் வசிப்பிடத்திற்கு உட்பட்ட மாவட்டப் பதி வாளரிடம் தங்களது உறவைக் கட்டாய மாகப் பதிவு செய்ய வேண்டும்” என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், “லிவ்-இன் உறவு முடிவுக்கு வந்தாலும் அதைப் பதிவு செய்து ரத்து செய்ய வேண்டும். உறவைப் பதிவு செய்யத் தவறினால் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். </p><p>லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகளின் விவரங்களை உள்ளூர் காவல்துறை பராமரிக்க வேண்டும். நில உரிமையா ளர்களோ அல்லது அண்டை வீட்டினரோ பதிவு செய்யப்படாத உறவுகள் குறித்து புகார் அளிக்கலாம்.</p><p>லிவ்-இன் ஜோடிக ளின் உறவு குறித்து அவர்களின் பெற்றோ ருக்குத் தெரிவிக்கப்படும். மேலும், பிரி வின்போது பெண் துணைக்கு ஆண் பரா மரிப்புத் தொகை வழங்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.</p><p> ஜூலை 19ஆம் தேதி சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, 20ஆம் தேதி தொடங்க வுள்ள சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. </p>
