முந்தய பக்கம்

மத்தியப் பிரதேச படகு விபத்து: தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

2 May 2026, 5:47 pm
மத்தியப் பிரதேச படகு விபத்து: தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
<p>மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே நிகழ்ந்த படகு விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பார்கி அணை பகுதியில் 40 பயணிகளை ஏற்றி சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதில் மத்தியப் பிரதேச திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த காமராஜ் (38), அவரது மனைவி கார்குழலி (38), இளைய மகன் தமிழ்வேந்தன் (5), திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த அவரது உறவினர் சவுபாக்கியவதி மற்றும் அவர் மகள் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram