தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கம்யூனிஸ்டுகள் அரசியல் விமர்சனங்களை வரவேற்பவர்கள் கடலூரில் மு. வீரபாண்டியன் பேட்டி

26 Jun 2026, 11:35 pm
கம்யூனிஸ்டுகள் அரசியல் விமர்சனங்களை வரவேற்பவர்கள் கடலூரில் மு. வீரபாண்டியன் பேட்டி
<p><strong>கம்யூனிஸ்டுகள் அரசியல் விமர்சனங்களை வரவேற்பவர்கள் கடலூரில் மு. வீரபாண்டியன் பேட்டி</strong></p><p>கடலூர், ஜூன் 26- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடலூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறிய தாவது: &quot;ஜனநாயகத்தின் அடித் தளமே விமர்சனம் தான். கம்யூ னிஸ்டுகள் அரசியல் விமர்ச னங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் வரவேற்போம்; அதனைத் திறம்பட எதிர்கொள்வோம். ஆனால், விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாகவோ அல்லது அந்தரங்கத்தைப் பறிப்பதாகவோ இருக்கக்கூடாது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் ஒரு போராளி. அவர் மீது தற்போது வைக்கப்படும் விமர்சனங்கள் ஏற்புடைய தல்ல; இடதுசாரிகள் இதனை உறுதியுடன் எதிர்கொள்வார்கள்.</p><p>&quot;<strong> தெருவோர வியாபாரிகள் </strong>&quot;</p><p>தமிழ்நாடு முழுவதும் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுத்து வருகிறது. கடலூரில் ஆக்கிர மிப்பு என்ற பெயரில் வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் ஒப்படைக்க வேண்டும்; அவர்களைப் பாதுகாக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.</p><p>&quot;<strong> ஹைட்ரோ கார்பன் திட்டம் &quot;</strong></p><p>பரங்கிப்பேட்டை கடற்கரையோரம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முயல்வது ஏற்கத்தக்கதல்ல. இத்திட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் மாசுபடும். எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்.&quot; &quot;கடலூர் மாவட்டம், பேரிடர் காலங்களில் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய மாவட்டமாகும். எல்-நினோ பாதிப்பு குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலை யில், கடும் மழை மற்றும் வெள்ளத்தைச் சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.&quot; கோரிக்கைகள் &quot;உள்ளாட்சி அமைப்புக ளுக்குக் கூடுதல் அதிகாரங்களை யும் நிதியையும் வழங்கி, அவற்றைத் தன்னாட்சியுடன் செயல்பட வைக்க வேண்டும். மேலும், விருத்தாச்சலத்தைத் தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்.&quot; &quot;விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 29-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒன்றிய அரசு தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை விடுவிக்க வேண்டும். காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 6 முதல் 15-ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபயணப் போராட்டம் மேற்கொள்ள உள்ளோம்<strong>.</strong></p><p><strong>&quot; பொதுத்துறை நிறுவனங்கள் &quot;</strong></p><p>என்.எல்.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் சொத்து; அவை அடுத்த தலைமுறைக்கானவை. பொருளாதார நெருக்கடியின் போது நாட்டைத் தாங்கிப் பிடிப்பதே இந்த நிறுவனங்கள்தான். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குத் தாரை வார்க்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை ஏற்க முடியாது.</p><p><strong>&quot; சட்டம்-ஒழுங்கு &quot;</strong></p><p>புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்குக் கால அவகாசம் தேவையில்லை. பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான தாக்குதல்களைக் கட்டுப்படுத்த ஊர்தோறும் பாதுகாப்பு அரணுகளை உருவாக்க வேண்டும். பெண்களைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும்.&quot; இவ்வாறு மு. வீரபாண்டியன் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.