அமலாக்கத்துறை சோதனை அரசியல் பழிவாங்கல்! மு. வீரபாண்டியன் கண்டனம்
28 May 2026, 9:44 pm
<p><strong>அமலாக்கத்துறை சோதனை அரசியல் பழிவாங்கல்! மு. வீரபாண்டியன் கண்டனம்</strong></p><p>விழுப்புரம், மே 28 - கேரள முன்னாள் முதல்வ ரும் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பினராயி விஜயன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் குற்றம் சாட்டினார். </p><p> புதன்கிழமை விழுப்புரம் வருகை தந்த மு. வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: “கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது ஏற்கத்தக்கதல்ல. </p><p>சட்டப்படி யார் வீடுகளில் வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் என்று கூறினாலும், 12 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவைச் சேர்ந்த எந்தவொரு தலைவர் வீட்டிலாவது இதுவரை சோதனை நடத்தப்பட்டுள்ளதா? இதற்கு ஒன்றிய அரசு பதில் சொல்ல வேண்டும். </p><p>அமலாக்கத்துறை சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்த பிறகு, சம்பந்த ப்பட்ட நபர்கள் பாஜக-வில் இணைந்தால் அவர்கள் குற்ற மற்றவர்களாகி விடுகிறார்கள். இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன. </p><p>இது அப்பட்ட மான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. </p><p>இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இத்தகைய நாடுகளில் இத்தகைய பழிவாங்கும் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படு வது வேதனையானது. </p><p>தோழர் பினராயி விஜயன் வீட்டில் நடந்த சோதனையும் ஒரு அரசியல் பழிவாங்கல் தான். நாடு முழுவதும் உள்ள இடதுசாரித் தலைவர்களின் வீடுகளில் இன்னும் எத்தனை ஆண்டுகள், எத்தனை முறை சோதனை நடத்தினாலும், அங்கு எந்தவொரு தேசவிரோதப் பொருட்களையும் கண்டெடுக்க முடியாது. </p><p>கட்சி வழங்கும் நிதியில்தான் ஊழியர்களும் தலைவர்களும் வாழ்கிறார்கள். </p><p>மீண்டும் மீண்டும் சோதனை செய்தால், அங்கு புத்தகங் களைத்தான் எடுக்க முடியும். </p><p>அதில் சேகுவேரா, ஏங்கல்ஸ், லெனின், பெரியார், அம்பேத் கர், காந்தி உள்ளிட்ட தேசத் தலைவர்களின் புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும்.</p><p> அந்தப் புத்தகங்களை யாவது எடுத்துச் சென்று படித்தால், சோதனை நடத்துபவர்களுக்குக் கொஞ்சம் சிந்தனையும் அறிவும் வரும். </p><p>இடதுசாரித் தலைவர்களின் வீடுகளில் இது தவிர வேறு எதுவும் கிடைக்காது. </p><p>எனவே, இந்தச் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை; இதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது.” இவ்வாறு மு. வீரபாண்டியன் கூறினார். </p><p>இந்தச் சந்திப்பின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ. சவுரிராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் முருகன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பாரதி, மாநிலக் குழு உறுப்பினர் தினேஷ், நகரச் செயலாளர் அகத்தியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.</p>
