ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் சிலிண்டர் மானியம் ரத்தாகும்?
13 May 2026, 1:59 am
<p><strong>ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் சிலிண்டர் மானியம் ரத்தாகும்?</strong></p><p>சென்னை, மே 12- ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள சமையல் எரிவாயு நுகர்வோருக்கான மானியத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. </p><p>அரசு அனுப்பும் குறுஞ்செய்தி மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் உத்தரவின்படி, வருமான வரி கணக்குகளின் அடிப்படையில் குறிப்பிட்ட வருமான வரம்பைத் தாண்டிய நுகர்வோருக்குத் தற்போது குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. </p><p>அதில், “உங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. </p><p>இதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் 7 நாட்களுக்குள் 1800-2333-555 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இல்லையெனில் மானியம் நிறுத்தப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>நுகர்வோர் அதிருப்தி தற்போது சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.24.50 மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது. </p><p>இந்தச் சிறிய தொகைக்காகத் தனிநபரின் வருமான வரி விவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்வது ‘தனியுரிமை மீறல்’என நுகர்வோர் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். </p><p>“ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்குக்கூடப் பத்தாத இந்த மானியத் தொகையை ரத்து செய்ய இவ்வளவு மெனக்கெடுவது தேவையற்றது” எனப் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். </p><p>குழப்பத்தில் விநியோகஸ்தர்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கேஒய்சி சரிபார்ப்பிற்குப் பிறகு இத்தகைய செய்தி கள் அனுப்பப்படுவதால் வாடிக்கையா ளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள் ளதாக எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரி விக்கின்றனர். </p><p>ஊரடங்கு காலத்திற்குப் பிறகு குறைக்கப்பட்ட இந்த மானியத் தொகை மீண்டும் உயர்த்தப்படாத நிலை யில், இந்த புதிய நடவடிக்கை நுகர்வோரை எரிச்சலடையச் செய்துள்ளது.</p>
