குறைந்த கட்டணத்தில் நோய் பரிசோதனை கூடம்
28 Jan 2026, 2:33 pm
<p><strong>குறைந்த கட்டணத்தில் நோய் பரிசோதனை கூடம்</strong> சென்னை, ஜன. 28- தரமான மருத்துவ சேவைகளை அனைவருக் கும் மலிவான கட்டணத்தில் வழங்கும் நோக்கில், காசாகிராண்டு நிறுவனம் சென்னை பெசன்ட் நகரில் ‘காசாகிராண்டு பவுண் டேஷன் டயக்னா ஸ்டிக் சென்டரை’ தொடங்கி யுள்ளது. இந்த மையத்தில், நவீன மருத்துவ நோயறிதல் பரி சோதனைகள் அனைத்தும் மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மக்கள் நலனை முன்னி றுத்தி, ஓர் இலாப நோக்கற்ற முயற்சியாகத் தொடங்கப் பட்டுள்ள இந்த அதிநவீன மையம், நோயறிதல் மற்றும் தடுப்பு சிகிச்சைகளை மிகக் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெறும் 25 ரூபாய் என்ற தொடக்கநிலை கட்ட ணத்தில் 100-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய சேவை கள் மற்றும் நவீன பரி சோதனைகளை வழங்கு வதன் மூலம், நகரத்திலுள்ள அனைவருக்கும் மருத்துவ சேவைகள் எப்போதும் எளிதில் பெறக்கூடியதாக இருப்பதை இது உறுதி செய்கிறது என்று நிறு வனத்தின் நிறுவனர் எம்.என். அருண் கூறியுள்ளார்.</p>
