தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

2 Jun 2026, 8:42 pm
லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்
<p><strong>லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்</strong></p><p>லண்டன், ஜூன் 2- இங்கிலாந்தின் தலைநகர் லண்டனின் முக்கிய போக்குவரத்து வாழ்வாதாரமாக விளங்கும் சுரங்க ரயில் (Tube) ஓட்டுநர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். </p><p>வாராந்திர வேலை நாட்களை மாற்றி அமைப்பது தொடர்பான புதிய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதால், லண்ட னின் ஒட்டு மொத்தப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>லண்டன் போக்குவரத்து வாரியம் (TfL) ஓட்டுநர்க ளுக்காக வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முயல்கிறது. </p><p>இந்த திட்டத்தின் கீழ் வேலை நேர மாறுபாடுகள், ஓட்டுநர்களின் உடல் சோர்வு, ஷிப்ட் நீளம் மற்றும் பாதுகாப்புக் குறை பாடுகள் போன்ற பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்ப தாக ‘ஆர்.எம்.டி’ (RMT) தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>இது தொடர்பாக அரசு நடத்தியபேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஆர்.எம்.டி சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக லண்டன் ரயில் சேவையின் பெரும்பகுதி முற்றிலும் முடங்கியுள்ளது. </p><p>போதிய ரயில்கள் இல்லாததால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், பயணத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் சாலைப் போக்குவரத்தைப் பயன்படுத்த துவங்கியதால் லண்டன் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தப் போராட்டம் இத்துடன் முடிவடையவில்லை. இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிற வியாழக்கிழ மையும் இரண்டாவது கட்டமாக மீண்டும் 24 மணி நேர வேலைநிறுத்தம் செய்ய ஆர்.எம்.டி சங்கம் திட்டமிட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.