தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

28 Nov 2025, 2:28 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
<p><strong>மகளிர் தொழில் துவங்க மானியத்துடன் கடன் உதவி</strong></p> <p>திருப்பூர், நவ.28- &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; தொழில்களில் பெண்களின் பங்கு &nbsp;மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற &nbsp;நோக்கத்துடன், அடுத்து வரும் ஐந்து &nbsp;ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை &nbsp;தொழில் முனைவோராக உயர்த்திடும் &nbsp;பெருந்திட்டம் ஒன்றுசெயல்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரண வரே தெரிவித்துள்ளதாவது, இத்திட்டத் தின் கீழ் பயன்பெற தமிழ் நாட்டை சார்ந்த &nbsp;18 வயது முதல் 55 வயது வரை உள்ள &nbsp;மகளிர் மட்டும் விண்ணப்பம் செய்ய லாம். கல்வித் தகுதி தேவையில்லை, &nbsp;இத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை உள்ள &nbsp;தொழில்கள் (வியாபாரம், சேவை, மற் றும் உற்பத்தி) 25 சதவித மானியத்துடன் &nbsp;(அதிகபட்சமாக ரூ.2 லட்சம்) தொடங்க லாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் பழங்கு டியினர், பட்டியலினத்தவர், திருநங்கை கள் மாற்றுத் திறனாளிகள், கைம்பெண் கள் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் &nbsp;உள்ளோர்களுக்கு முன்னுரிமை வழங் கப்படும். நேரடி வேளாண்மை சார்ந்த தொழில்கள், பண்ணை சார்ந்த தொழில் கள், எர்த்முவர்ஸ், கட்டிடம் மட்டும் &nbsp;கட்டுதல் தவிர்த்து சுற்று சூழலுக்கு &nbsp;பாதிப்பு ஏற்படுத்தாத எந்த தொழிலை யும் செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்க www.msmeonline.tn.gov.in/twees என்ற இணையதள முகவரியில் மகளிர் &nbsp;தொழில் முனை வோர் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்கள் பெறவும், கூடுதல் வழிகாட்டுதலுக்கும் 89255 34023. 89255 &nbsp;34024, 89255 34025 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஆகவே தகுதி யும் ஆர்வமும் உள்ள மகளிர் தொழில் முனைவோர்கள் விண்ணப்பித்து பயன் &nbsp;பெறுமாறு தெரிவித்துள்ளார்.</p> <p><strong>இல்லம் தேடி பொது விநியோகம்</strong></p> <p>திருப்பூர், நவ.28- திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமான வர் திட்டத்தின் மூலம் 65 வய திற்கு மேற்பட்ட முதியோர் &nbsp;மற்றும் மாற்றுத்திறனாளிக ளின் இல்லத்திற்கே நேரில் &nbsp;வந்து டிச.2 டிச.3 ஆகிய தேதி களில் பொது விநியோகத்திட் டம் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு மாவட்ட &nbsp;ஆட்சியர் மனிஷ் &nbsp;நாரணவரே தெரிவித்துள் ளார்.</p> <p><strong>பருத்தி ஏலம்</strong></p> <p>திருப்பூர், நவ.28- அவிநாசி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத் தில் ரூ.3.43 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு 4,809 கிலோ பருத்தி வரத்து &nbsp;இருந்தது. இதில், ஆர்.சி.எச். &nbsp;ரகப் பருத்தி கிலோ ரூ.70 முதல் ரூ.79.02 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.15 முதல் ரூ.25 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 3 லட் சத்து 43ஆயிரத்துக்கு வர்த்த கம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.