முந்தய பக்கம்

‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

18 Feb 2026, 6:06 am
‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
<p>&lsquo;சிந்தனைச் சிற்பி&rsquo; சிங்காரவேலர் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்; இனி வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.<br /> இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:<br /> விடுதலைப் போராளி - இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி - &#39;சிந்தனைச் சிற்பி&#39; சிங்காரவேலர் பிறந்தநாள்<br /> தந்தை பெரியாருடன் குடிஅரசில் இணைந்த - பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் அவர்கள்!<br /> சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவருக்குச் சிலை அமைத்து, அந்த அலுவலகத்துக்குச் &#39;சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மாளிகை&#39; என்றே பெயரும் சூட்டியவர் நம் தலைவர் கலைஞர்.<br /> இந்தியாவில் முதன்முறையாக மே-1 உழைப்பாளர் நாளைச் செவ்வண்ணக் கொடியேற்றிக் கொண்டாடி, தொழிலாளர் நலனுக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த சிங்காரவேலரின் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்! இனி வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம்! &quot; இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram