முந்தய பக்கம்

‘பாஜகவுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடுவோம்’

29 Nov 2025, 4:58 pm
‘பாஜகவுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடுவோம்’
<p><strong>&lsquo;பாஜகவுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடுவோம்&rsquo;</strong></p> <p>தொழிலாளர் சட்டங்களை காலில் போட்டு மிதிக்கும் மோடி அரசாங்கத்திற்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடு வோம் என ராஷ்டிரிய மில் மஸ்தூர் சங் (Rashtriya Mill Maz door Sangh) தலை வர் சச்சின் அஹிர் எம்எல்ஏ கடுமையாக எச்சரித்துள்ளார். &nbsp;இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,&ldquo;100 ஆண்டுகளுக்கு முன் கடுமையான போராட்டத்தின் மூலம் வென்றெடுக்கப்பட்ட 29 தொழிலாளர் சட்டங்களை இரக்கமின்றி ரத்து செய்து விட்டு, அவற்றை நான்கு &lsquo;தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் (Four Labour Codes)&rsquo; என்ற பெயரில் அனைத்து மாநி லங்களிலும் அமல்படுத்த ஒன்றிய &nbsp;பாஜக அரசு சதி செய்து வருகிறது. &nbsp;ஒன்றிய அரசு சமீபத்தில் அமல் படுத்திய இந்த 4 தொழிலாளர் குறியீடுக ளும், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் கழுத்தில் கத்தியாக அமையும். இதன் காரணமாக, முதலா ளித்துவத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்த ஆயுதமான வேலைநிறுத்தம் (Strike) இனி பயனற்றுப் போகும் நிலை &nbsp;ஏற்படும். தொழிலாளர்கள் இனி கோடீஸ் வரர்களை அனுசரிக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை உருவா கும். தொழிலாளர்களுக்கு சுயமரி யாதை கிடைக்காது. புதிய சட்டத் தொ குப்புகளில் &lsquo;நிர்ணய கால வேலை வாய்ப்பு (Fixed-Term Employment)&rsquo; என்று இருந்தும் கூட, வேலைக்கு எந்தவித மான உத்தரவாதமும் இல்லாத ஒரு சோகமான நிலை உருவாகியுள் ளது. தொழிலாளர் வர்க்கத்தின் நலன் களைப் பாதுகாக்க, மோடி அர சாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டியது அவசியம்&rdquo; என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram