சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாப்போம்
29 Dec 2025, 6:22 pm
<p><strong>சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாப்போம்</strong></p>
<p>கோவை, டிச.29- சிறுபான்மை மக்களின் வழி பாட்டு உரிமையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம், சிபிஐ சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சிகளை சீர்குலைக்கும் வகை யில் பஜ்ரங் தள், அனுமன் சேனா உள் ளிட்ட இந்துத்துவா கும்பல் வன் முறையை கட்டவிழ்த்துள்ளது. கிறித்துவர்கள் மீது ததாக்குதல் நடத்தியுள்ளனர். கிறிஸ்துவர், இஸ் லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் மீது பல்வேறு பெயர்களை கொண்ட இந்துத்துவா கும்பல் திட்ட மிட்டு தாக்குதல் நடத்தி, அவர்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்து வருகின்றனர். இதில் ஈடுபடும் நபர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதம் மூலம் மக்க ளிடையே வெறுப்பை பரப்பும் ஆர் எஸ்எஸ் – பாஜகவினர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிறு பான்மை மக்களின் வழிபாட்டு உரி மைகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மசக்காளி பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிபிஐ நகரச் செயலா ளர் சண்முகம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வீ.தெய்வேந்திரன், சிபிஐ தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் தங்க வேல் ஆகியோர் கண்டனவுரை யாற்றினர். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், சிங்கை நகரச் செயலாளர் சி.மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் பூபதி, சிபிஐ மாவட்டப் பொருளாளர் கல்யாண சுந்தரம், மாவட்ட நிர்வாகி செல் வராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
