பாலின சமத்துவத்தை பாதுகாப்போம்! மாதர் சங்கம் நடைபயணம்
1 Jan 2026, 4:52 pm
<p><strong>பாலின சமத்துவத்தை பாதுகாப்போம்! மாதர் சங்கம் நடைபயணம்</strong></p>
<p>திருவாரூர், ஜன.1 - பாலின சமத்துவத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் மெழுகுவர்த்தி ஏந்தி, பாலின சமத்துவ நடைபயணம் ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக புதன்கிழமை இரவு நடை பெற்றது. திருவாரூர் பேருந்து நிலையம் அருகே துவங்கிய நடைபயணம் நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கே.ஜெகதீஸ்வரி தலை மையில், மாவட்டச் செயலாளர் ஜி.கலைச் செல்வி நடைபயணத்தை துவக்கி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் பா.கோமதி நிறை வுரையாற்றினார். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து துவங்கிய நடைபயணம் கடைவீதி வழியாக சென்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலு வலகத்தில் நிறைவடைந்தது. நடைபயணத் தில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
