முந்தய பக்கம்

200 தொகுதிகளில் வென்று வரலாறு படைப்போம்!

22 Feb 2026, 3:26 pm
200 தொகுதிகளில் வென்று வரலாறு படைப்போம்!
<p><strong>200 தொகுதிகளில் வென்று வரலாறு படைப்போம்!</strong></p> <p>உடுமலை, பிப்.22- வரும் சட்டமன்ற தேர்தலில், 200 தொகுதிகளில் வென்று வரலாறு படைப்போம், என உடுமலையில் நடை பெற்ற நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலை அண்ணா குடியிருப்பு பகுதியில், மாவட்ட இளைஞரணி சார்பில், கலை ஞர் நூலகம் மற்றும் பழனி சாலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக அலுவ லகத்தை தமிழக துணை முதல்வரும், திமுக மாநில இளைஞரணி செயலாள ருமான உதயநிதி ஸ்டாலின் ஞாயிறன்று திறந்து வைத்தார். இதன்பின் கழக முன்னோடிகள் 1200 பேருக்கு பொற்கிழி வழங்கி அவர் பேசுகையில், நமது முதல் வர் தலைமையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். அதற்கு மூத்த முன் னோடிகளும் ஒரு காரணம். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்க ளின் நம்பிக்கையை பெறும் வகை யில், நமது முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சட்டமன்ற தேர்தலை காரணம்காட்டி, ஒன்றிய அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நீதிமன்றம் சென்று நிறுத்த முயற்சி செய்ததை அறிந்த முதல்வர், உடனடியாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மாதங்களுக்கு தலா ரூ.ஆயிரம், கோடைக்கால சிறப்புநிதி ரூ.2 ஆயிரம் &nbsp;என மொத்தம் ரூ.5 ஆயிரம் வழங்கி யுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில், நம்முடைய கூட்டணி 200 தொகுதி களில் வென்று, வரலாறு படைக்கும், என்றார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கள் மு.பெ.சாமிநாதன், அர.சக்கர பாணி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜெய ராமகிருஷ்ணன், முபாரக் அலி, முரு கானந்தம், ராதிகா, சக்திவேல் உட்பட &nbsp;பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram