முந்தய பக்கம்

இடதுசாரிகள் – விசிக ஆலோசனை கூட்டம்

6 May 2026, 1:10 am
இடதுசாரிகள் – விசிக ஆலோசனை கூட்டம்
<p><strong>இடதுசாரிகள் – விசிக ஆலோசனை கூட்டம்</strong></p><p>ஈரோடு, மே 5- ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து வியாழ னன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குவது குறித்த, இடது சாரிகள் மற்றும் விசிக நிர்வாகிகள் பங் கேற்ற ஆலோசனை கூட்டம் ஈரோடு, நாமக்கல் மாவட் டங்களில் நடை பெற்றது.</p><p> வணிக சமை யல் எரிவாயு விலை உயர்வைக் கைவிட வேண் டும், பணியிட குறைப்பை ரயில்வே நிர்வா கம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி 7 ஆம் தேதி ஒன் றிய அரசை கண் டித்து நடத்திட இடதுசாரி கட்சி கள் மற்றும் விசிக வினர் இணைந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. </p><p>இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகர மாக்குவது குறித்த ஆலோசனை கூட் டம் ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்றது. </p><p>இதில், சிபிஐ தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிரபாகரன் தலைமை ஏற்றார்.</p><p> இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், சிபிஐ (எம்எல்) வி ஜெ.பி.கார்த்தி கேயன் மற்றும் விசிக மாநகர செயலா ளர் சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். </p><p>இதில், ஜவான் பவன் முன்பு காலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளா னோரை பங்கேற்க வைப்பது என முடி வெடுக்கப்பட்டது. </p><p>நாமக்கல் இதேபோன்று, நாமக்கல்லின் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் சிபிஐ மாவட்டச்செய லாளர் க.அன்புமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. </p><p>இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, கட்சி செயற்குழு உறுப் பினர்கள் ஏ.ரங்கசாமி, ந.வேலுசாமி, ஏ. டி.கண்ணன் மற்றும் விசிக மண்டலச் செயலாளர் பழமணிமாறன், மண்டல துணைச்செயலாளர் வே.காமராஜ், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram