தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமைச்சரவையில் அதிமுக பங்கேற்றால், ஆதரவு மறுபரிசீலனை!

20 May 2026, 11:08 pm
அமைச்சரவையில் அதிமுக பங்கேற்றால், ஆதரவு மறுபரிசீலனை!
<p><strong>அமைச்சரவையில் அதிமுக பங்கேற்றால், ஆதரவு மறுபரிசீலனை!</strong></p><p>பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிராக, சென்னையில் இடதுசாரிக் கட்சி கள் சார்பில் புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தி யாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்வி களுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பதிலளித்தார்.</p><p> தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது தொடர்பாக எழுப்பப் பட்ட கேள்விக்கு, “தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்ப தை, ஏற்கெனவே இடதுசாரிகள், விடு தலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய மூன்று பேரும் கூட்டாக சேர்ந்துதான் எடுத்திருக்கிறோம். </p><p>ஒருவேளை அமைச்சரவையில் பங்கேற்பது என்ற யோசனை விடுதலைச் சிறுத்தை களிடம் இருந்தால், அதைப்பற்றி அவ ர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். </p><p>விடுதலைச் சிறுத்தைகள் ஒரு வாய்ப்பு வருவதை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தால் அது தவறான விஷயம் அல்ல” என்று பெ. சண்முகம் கூறினார். </p><p>மேலும், ‘தவெக அமைச்சரவை யில் அதிமுக இடம் பெற்றால் இடது சாரிகளின் நிலைபாடு என்ன?’ என்ற கேள்விக்கு, “தவெக அமைச்சரவை யில் அதிமுக பங்கேற்றால், நாங்கள் எங்களுடைய முடிவை மறு பரிசீலனை செய்வோம் என்பது ஏற்கனவே தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. </p><p>அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்றார். மு. வீரபாண்டியன் பதில்: சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூறுகையில், “சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஒரே நிலை தான் எடுத்திருக்கிறோம். </p><p>மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காகவே, வெளியில் இருந்து நாங்கள் ஆதரவு அளிக் கிறோம். </p><p>ஒன்று மக்கள் தீர்ப்புக்கு மதிப்ப ளிப்பது, இரண்டாவதாக இன்னொரு தேர்தலை திணிக்கக் கூடாது. மூன்றாவ தாக ஆளுநர் அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது.</p><p> எனவே வெளியில் இருந்து ஆதரவு என்ற மிகச் சரியான அரசியல் நாங்கள் எடுத்திருக்கிறோம். எங்கள் ஆதரவே அவர்களுக்குப் போதும். </p><p> இதுகுறித்து முதல்வர் தான் சிந்திக்க வேண்டும். வெளியில் இருந்து நாங்கள் ஆதரிப்போம் கொள்கை வழி யில். </p><p>சிலர் சொல்வது போல் நெருக்கடி, குடைச்சல், கல்லடி என்பதெல்லாம் அல்ல. </p><p>உழைக்கும் மக்கள், எளிய மக்கள், நாட்டு நலன் இந்த கோரி க்கையைத் தான் முன் வைப்போம். எப்போதும் நாங்கள் உழைக்கும் மக்கள், ஏழை, எளியவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று தான் குரல் கொடுப்போம்” என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.