தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தலைவர்கள்!

5 May 2026, 9:21 pm
மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து  நன்றி தெரிவித்த தலைவர்கள்!
<p><strong>மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தலைவர்கள்!</strong></p><p>சென்னை, மே 5 - தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை யடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். </p><p>திருமாவளவன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேம லதா விஜயகாந்த் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழ மை (மே 5) அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர். </p><p>நடைபெற்று முடிந்த தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைத் தமைக்காக கூட்டணியின் தலைவரான மு.க. ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்த னர்.</p><p>ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் மதிமுக, சிபிஐ, விசிக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் முதல்வரைச் சந்தித்தனர். </p><p>சங்-பரிவாரங்களை முறியடித்துள்ளோம் இந்த சந்திப்புக்குப் பின்னர் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். </p><p> இதில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், “திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் வகையில் வெற்றி பெறவில்லை என்றாலும், நாங்கள் முன்னெடுத்த முயற்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது.</p><p> அதிமுக முதுகில் ஏறிக்கொண்டு பாஜக உள்ளிட்ட சங்கப்பரிவார் சக்திகள் தமிழ்நாட்டில் கோலோச்ச திட்டமிட்டார்கள். </p><p>அதை முறியடிப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டு நாங்கள் களமிறங்கி னோம். </p><p>அதில் நூறு விழுக்காடு வெற்றி பெற்றோம். </p><p> யூகமாக பதிலளிக்க முடியாது தவெகவை எதிர்ப்பின் இலக்காக நாங்கள் முன்னிறுத்தவில்லை; எங்கள் குறி அதிமுக, பாஜக வலிமை பெற்றுவிடக் கூடாது என்பதில் தான் இருந்தது. </p><p>தமிழ் நாட்டில் சங்-பரிவார்கள் இனி காலூன்று வதற்கு வாய்ப்பில்லை என்பதை மக்கள் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது” என்றார். </p><p>தவெகவுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு, “தேர்தல் முடிந்து ஒன்று இரண்டு நாட்களே ஆகியிருக்கின்றன. </p><p>அது யூகமான கேள்வி; நீங்கள் யூக மாகவே எழுதிக்கொள்ளுங்கள்” என்றார்.</p><p> மே 7 அன்று இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார். </p><p>தவெக-வால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா, என்ற கேள்விக்குப் பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். </p><p>மெஜாரிட்டி கிடைக்குமா, கிடைக்காதா என்பது எங்களுடைய பிரச்சனை இல்லை” என்று கூறினார்.</p><p> பின்னர் இந்த மூன்று தலைவர்களும், சிபிஎம் அலுவலகத்தில் கூடி மே 7 ஆர்ப்பாட்டம் குறித்த வழிமுறைகளை உருவாக்கினர். </p><p>சிபிஐ(எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பியும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.