முந்தய பக்கம்

இது ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்

12 Apr 2026, 5:30 am
இது ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்
<p><strong>இது ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்</strong></p><p>முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தாமஸ் உறுதி. கொச்சி: கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி. தாமஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>கேரள அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியான கே.வி. தாமஸ் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், &quot;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரும். காரணம் மக்கள் பணியில் எல்டிஎப் சிறந்து விளங்குகிறது.</p><p>ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) உட்பூசலில் தான் சிதறுண்டுச் செயல்படுகிறது. இதனால் யுடிஎப் ஆட்சியமைக்க முடியாது. பாஜக அரசியல் புகலிடம் தேடும் கலாச்சாரத்தை கொண்டு வருகிறது.</p><p>தேவாலயங்களை எங்களுக்கு (பாஜகவிற்கு) ஆதரவு அளிக்கவில்லை என்றார். பதிலுக்கு பாஜகவும் தேவாலயங்களுக்கு உதவ மாட்டோம் என்று பாஜகவினர் மிரட்டல் விடுகின்றனர். பாலக்காட்டில் நடந்த சம்பவங்களோடு இதற்கு சாட்சி.</p><p>பாஜகவினர் முகமூடி அணிந்த ஓநாய்களாக வருகின்றனர். தங்கள் பேச்சின் மூலம் தேவாலயங்களை மிரட்டப் பார்க்கிறார்கள். ஆனால், கேரளத்தில் இது பலிக்காது&quot; என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram