தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரையில் மத நல்லிணக்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை

9 Dec 2025, 4:25 pm
மதுரையில் மத நல்லிணக்கம்  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை
<p><strong>மதுரையில் மத நல்லிணக்கம் &nbsp;நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை</strong></p> <p>மதுரை, டிச. 9 &ndash; உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, மதுரையில் &nbsp;மத நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் மத நல்லிணக்கத்தை உறுதிப் படுத்தும் வகையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் &nbsp;எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் வழங்கிய மேன்முறையீட்டு மனு &nbsp;எண்கள்.1442, 1524/2014 தொடர்பான தீர்ப்பு களை தமிழக அரசு முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டும். &nbsp;மேலும், சமூக நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சமூக &nbsp;நல்லிணக்கப் போராளிகளும், நாடாளுமன்ற &nbsp;உறுப்பினர்களுமான திருமாவளவன் மற்றும் &nbsp;சு. வெங்கடேசன் ஆகியோரை இழிவுபடுத்தும் &nbsp;நோக்கத்துடன் பேசிய நபர்களை உடனடியாக &nbsp;கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்பு வழக்கறி ஞர்கள் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். &nbsp;இதில் வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், முத்து அமுதநாதன், பசும்பொன் பாண்டியன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள், சட்டத்தின் அடிப்படையில் மத நல்லிணக்கத்தை பாது காக்க வேண்டிய அரசின் கடமையை சுட்டிக் &nbsp;காட்டினர். மதுரை போன்ற பாரம்பரியமாக சமூக ஒற்றுமையை பேணிக் கொண்டுவரும் நகரில், சட்டத்தை மதித்து, உயர்நீதிமன்ற தீர்ப்புகளை செயல்படுத்துவதன் மூலம் &nbsp;அமைதியும் நல்லிணக்கமும் நிலைநிறுத்தப் பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.