நீதிபதி சுவாமிநாதனை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
8 Dec 2025, 4:39 pm
<p><strong> நீதிபதி சுவாமிநாதனை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் </strong></p>
<p>நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது பதவியை உடனே ராஜினாமா செய்யக் கோரி திங்களன்று (டிச.8) சென்னை உயர்நீதிமன்றம் முன்பு ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மூத்த வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் கே.இளங்கோ, மாநில பொதுச்செயலாளர் எஸ்.சிவக்குமார், திமுக வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர் கே.எஸ்.ரவிச்சந்திரன், ஜனநாயக வழக்கறிஞர் சங்க தலைவர் பாரதி, இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட பேசினர்.</p>
