சிதம்பரத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்
9 Dec 2025, 4:25 pm
<p><strong>சிதம்பரத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்</strong></p>
<p>சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சிதம்பரம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் இ- ஃபைலிங் முறையை கைவிட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜெ.ரகோத்தமன் தலைமை வகித்து பேசினார். போராட்டத்தில் சங்க துணைத் தலைவர் பி.சங்கர், செயலாளர் ஆர்.இதயச்சந்திரன், துணைச் செயலாளர் வி.டி.செல்வகுமார், பொருளாளர் கே.பட்டுராஜன், வழக்குரைஞர்கள் கௌதமன், மகேஷ், வைத்திலிங்கம், பட்டுசாமி, ஜானகி, ராஜாராம், ஸ்டாலின் ராஜா, பழனிவேல், குணசேகரன், பாலகுரு கணேசமூர்த்தி, செல்வகுமார், காரல் மார்க்ஸ், ஆழ்வார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.</p>
