கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: இன்று முதல்வர் வழங்குகிறார்
4 Jan 2026, 4:05 pm
<p><strong>கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: இன்று முதல்வர் வழங்குகிறார்</strong></p>
<p>சென்னை, ஜன.4 - கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற் றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினி கள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் திட்டத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கட் கிழமை (ஜன.5) மாலை 3 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் தொடக்கி வைக கிறார். மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கை யில்” என்னும் அறிவூட்டும் கருப்பொ ருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல மைச்சர் அறிவித்தார். இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங் களாக நிறைவேற்றப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அரசு பொறியி யல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாண வர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படு கின்றன. தொழில்நுட்ப அறிவியலை வலுப் படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படு கின்றன. மாணவர்களுக்கு வழங்கப் படும் இந்த மடிக்கணினிகளில் Intel i3 அல்லது AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்ன தாக நிறுவப்பட்டுள்ளன. நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் “அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்” என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொரு ளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது.</p>
