சேதுபாவாசத்திரம் அருகே 84 பயனாளிகளுக்கு மனைப் பட்டா வழங்கல்
16 Nov 2025, 3:30 pm
<p><strong>சேதுபாவாசத்திரம் அருகே 84 பயனாளிகளுக்கு மனைப் பட்டா வழங்கல்</strong></p>
<p>தஞ்சாவூர், நவ.16- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு கலைஞர் நகர், பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து, 84 பயனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்கி சிறப்புரையாற்றினார். திமுக தஞ்சை மாவட்டப் பொறுப்பாளர் டி. பழனிவேல் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், ஒன்றியக் கழகச் செயலாளர்கள், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர், பெருமகளூர் பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, திமுக மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினருமான பூமிநாதன் வரவேற்றார். ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் லெட்சுமணன் நன்றி கூறினார்.</p>
