தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலம் ஆக்கிரமிப்பு – தீ குளிக்க முயற்சி

19 Jan 2026, 2:23 pm
நிலம் ஆக்கிரமிப்பு – தீ குளிக்க முயற்சி
<p><strong>நிலம் ஆக்கிரமிப்பு &ndash; தீ குளிக்க முயற்சி</strong></p> <p>சேலம், ஜன.19- சொந்த இடத்தை ஆக்கிரமித்து வழித்தடம் விடாமல் மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பெட் ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால், சேலம் ஆட்சியர் &nbsp;அலுவலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டி &nbsp;கட்டிக்காரனுர் பகுதியை சேர்ந்த செல்வி (30), கணவர் &nbsp;மதியழகன் (40), மாமியார் கமலா (65), மாமனார் மணி &nbsp;(70), பெரியம்மா பெருமாயி ஆகிய 5 பேர் திங்களன்று &nbsp;மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப் போது அவர்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து 5 பேரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க &nbsp;முயன்றனர். இதனை பாதுகாப்புப்பணியில் இருந்த &nbsp;போலீசார் இதனை தடுத்து நிறுத்தி தண்ணீரை &nbsp;ஊற்றி பாதுகாத்தனர். இதுகுறித்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கமலா என்ப வர் கூறுகையில், எங்களுக்கு சொந்தமான 3 சென்ட் &nbsp;நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். இந்நிலை யில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் உறவி னர்களான இரண்டு பேர் எங்கள் நிலத்தில் உள்ள வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கழிவறை கட்டி &nbsp;உள்ளனர். இதனால் வழித்தடம் இல்லாமல் கடந்த ஆறு &nbsp;வருடங்களாக தவித்து வந்தோம். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது அப்படித் தான் செய்வோம் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது &nbsp;எனக்கூறி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புகார் தெரி வித்தோம். ஆனால் அதிகாரிகள் அவர்களுக்கு ஆதர வாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். &nbsp;வழித்தடம் இல்லாமல் எங்கும் செல்ல முடியாத நிலை &nbsp;உள்ளது. தொழிலுக்கும் செல்ல முடியாமல் தவித்து வரு கிறோம். வீட்டிலேயே முடங்கி கிடக்க முடியாத சூழ் நிலையில் இருப்பதை விட இறப்பதே மேல் என நினைத்து எங்கள் குடும்பத்தில் உள்ள ஐந்து பேரும் &nbsp;தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இங்கு &nbsp;வந்தோம். எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய &nbsp;விசாரணை நடத்தி எங்கள் நிலத்தில் வழித்தடத்தை ஆக் கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் &nbsp;நிலத்தை மீட்டு வழித்தடம் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.