தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேசிய அளவில் சாதனை படைத்த கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள்

14 May 2026, 10:01 pm
தேசிய அளவில் சாதனை படைத்த  கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள்
<p><strong>தேசிய அளவில் சாதனை படைத்த கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள்</strong></p><p>கும்பகோணம், மே 14- கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆந்திரப் பிரதேசம் திருப்பதியில் நடைபெற்ற தேசிய அளவிலான முதலாவது ட்ரிப் பால் நேஷனல் பெடரேஷன் கப் -2026 போட்டியில் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.</p><p> கடந்த மே 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை திருப்பதி கேவிஎஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசியப் போட்டியில், இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.</p><p> அதில் கல்வியுடன் விளையாட்டிலும் சாதனை படைக்கும் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் U-17 மாணவிகள் பிரிவில், ரீமா, சுவேதா, மித்ரா, மனுஷா, ஹர்ஷிதா, சுகயாழினி, கிரிஷாந்தி ஆகியோரும், U-17 மாணவர்கள் பிரிவில் முகமது அர்சித், தருண் குமார், தர்சன், ரோஹித், பிரவீன் குமார், விஷ்வா, கிஷன் குமார், ராஜேஷ் கண்ணன் ஆகியோரும், தங்களின் சிறப்பான விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றனர். </p><p>இவர்களது சாதனை பள்ளிக்கும் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. </p><p>வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர், கார்த்திகேயன், பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.